யாழில் கோர விபத்து - தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பலி!



கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை- கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் இரவு (25) குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் எனக் கூறப்பட்டுள்ளது.

இவர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் நெல்லியடி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.