யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா என்ற 35 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ளை கடந்த 30.09.2024 அன்றிலிருந்து காணவில்லை என அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் +94 75 389 6732 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.