உலக நாடுகளில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவுவதை அடுத்து, அதை தடுக்கும் பொருட்டு அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்றும், அல்லது கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படும் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு பற்றிய அச்சம் அதிகரித்து வருகிறது. அத்துடன் இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நிபுணர்களை கவலைகொள்ள வைத்துள்ளது.
பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் பச்சையாக பாலை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களில் உள்ள 29 பண்ணைகளில் இருக்கும் கோழிகள் மற்றும் மாடுகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலில் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் 1918ல் ஏற்பட்ட மிக மோசமான பறவைக்காய்ச்சல் பெருந்தொற்றை விடவும் மிக மோசமான நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தை நிபுணர்கள் தரப்பு பதிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, தற்போது கண்டறியப்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் பாதிப்பானது கொரோனா தொற்றை விடவும் 40 மடங்கு ஆபத்தானது என்றே தெரிவித்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கையும் பல மடங்காக இருக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.