‘லியோ’ பார்க்கச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு

விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது. சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.