சீனாவில் வீதியில் திடீர் பள்ளம் - 19 பேர் பலி



சீனாவில் வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.


இதையடுத்து அந்த வீதியில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கின. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் இந்த பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.