இருதலைக் கொள்ளி எறும்பாய் ரணில் - 13 தொடர்பில் வலுக்கும் புதிய சர்ச்சை!



13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார்

இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன அதிருப்தியில் இருப்பதாகவும், அதிபரின் உரையில் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடலாம் என்றும் நம்பப்படுகின்றது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது இந்திய விஜயத்திற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்த போது, 13ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் இன்றி ஏனைய அதிகாரத்துடன் முழுமையாகச் செயற்படுத்துவது தொடர்பில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய விஜயத்தின் பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.