லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 8.4 சதவீத ஊதிய உயர்வு!

அடுத்த மாதம் முதல் லண்டன் டியூப் தொழிலாளர்களுக்கு 8.4 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.லண்டன் நகர மேயர் சாதிக் கான் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.கடந்த பெப்ரவரி மாத சில்லறை விலைக் குறியீட்டு எண் (RPI) 8.2 சதவீதம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான போக்குவரத்து சபை (TfL) இன்று இந்த அதிகரிப்பை உறுதிப்படுத்தியதுதொழிலாளர்களுக்கு RPI+0.2 சதவீதம் வருடாந்திர ஊதிய உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் தொழிற்சங்கங்களுடன் லண்டனுக்கான போக்குவரத்து சபை, நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.ஏறக்குறைய 15,000 பேர் உயர்வுக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 100 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்றுநோய்க்கு முன்னர் செய்யப்பட்ட பிணைப்பு ஒப்பந்தம் அல்லது நாடு இப்போது அனுபவிக்கும் தற்போதைய 30 ஆண்டு உயர் பணவீக்க நிலைகள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.