யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 75 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமார்ந்த மூவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
இதன் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண காவல்துறையினர் மூவரை கைது செய்துள்ளனர்
அதன்படி 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவர் 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 40 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.