முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த காணிகளில் 74 சதவீதமான காணிகளை அரசாங கத்தின் 06 திணைக்களங்கள் சுவீகரித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
முன்னொரு காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் என்பது நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட மாவட்டம்.
முல்லைத்தீவில் இருந்து நெல் கொழும்புக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது முல்லைத்தீவு மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலமை காணப்படுகிறது விவசாய நிலத்தில் இறங்க முடியாத நிலமை காணப்படுகிறது.
வனலாகதிணைக்களம்,தொல்பொருள் திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம்,முப்படையினர் என்று 6 விதமான முறையில் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது என்றார்.