இந்தியாவில் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்சத்து 31 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மொத்தமாக 4 கோடியே 23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 92441 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8000ற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.மேலும் நேற்று ஒரேநாளில் 211 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 514000 கடந்துள்ளது.