தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளதுகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 794 பேர் குணமடைந்ததை அடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 150 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34.48 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.