யாழில் படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் இன்று (30.10.2023) அதிகாலை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிகாரி விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.