விமானத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்; இலங்கைக்கு சுற்றுலாவந்த புகைப்படங்கள் வைரல்


 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவாக வருகை தந்து பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.  

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பிரதீப் ஜோஷி கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி  வைத்தியர்  கோனி வியாஸ், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார்.

இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.

இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார்.

இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
இதன்போது விமானத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியிருந்ததுஇ

ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர்.

புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் அவர்கள் இலங்கையின் கண்டி நுவரேயாவிற்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்ப படங்கள் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.