அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காலான் கறி சாப்பிட்ட நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் லியோங்கதா என்ற பகுதியில் கடந்த ஜூலை 29 ஆம் திகதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீட்டில் மதிய உணவாக காளான் சாப்பிட்டிருக்கிறார்கள்.
உடனடியான அவர்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
நான்காவது நபரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எந்த வகையான காளான் சமைத்து பரிமாற்றப்பட்டது என்பது தெரியாவிட்டாலும், அது விஷக் காளான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண பொலிஸ் அதிகாரி தோமஸ் தெரிவித்துள்ளார்.