ரணிலின் யாழ் விஜயம்..! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் அதிபர் மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.