உக்ரைன் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் பலி!

ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து போலந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் 34 பயணிகளும் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.