உக்ரைன் மரியுபோலில் இருந்து 20 பொதுமக்கள் வெளியேற்றம்!

உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது,கடந்த வாரம், ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் உத்தரவிற்கு அமைய உக்ரைனின் பாரிய தொழில்துறைகளை கொண்ட பிரதேசம் ரஷ்ய படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.இந்த நிலையில் 20 பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்த வளாகத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அகப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.