மலேசியாவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து : 10 பேர் பலி


மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின் போது நடுவானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) இடம்பெற்றது.

இதன்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகொப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர்.
 
நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்று மற்றொரு ஹெலிகொப்டரின் காற்றாடி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஓடு பாதையில் கீழே விழுந்ததில் ஏழு பேரும் உயிரிழந்தனர். அதேபோன்று; மூன்று பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் நீச்சல் குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
 
இதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. உயிரிழந்த 10 பேரும் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரு ஹெலிகொப்டர்களில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிப்படுத்தப்பட்டநிலையில், அடையாளம் காண ராணுவ மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்று மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.