இந்தியா – சீனா இடையே 15வது சுற்று பேச்சுவார்த்தை!

இந்தியா – சீனா இடையே 15வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சுமூக முடிவு எட்டப்படாதமையினால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.கடந்த 2020 ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீன இராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.