சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது குழுவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.