சூடானில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்!

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது குழுவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.