மெக்சிகோவில் காருக்குள் 10 உடல்கள் மீட்பு-இருவர் கைது!

மத்திய மெக்சிகோ மாநிலமான ஸகாடெகாஸில் காருக்குள் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மஸ்டா எஸ்யூவி ரக வாகனம் உள்ளூர் மாநில ஆளுனர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு பொது சதுக்கத்தின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது.இந்த வாகனத்தின் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்து சோதனை செய்த போது குறித்த பத்து பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மத்திய மாநில ஆளுநர் டேவிட் மான்ரியல், இரண்டு சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.குறித்த இருவரும் அலுவலகத்திற்கு முன்னால் வாகத்தை விட்டுச் செல்ல வந்தவர்கள் என அவர் குற்றம் சாட்டினார்.மெக்சிகன் பாதுகாப்பு அமைச்சகம், உள்ளூர் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் உதவியை அனுப்புவதை உறுதிப்படுத்தியது.