'நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்ட பாதாள குழுவின் தலைவரின் வீடு.." : காலியில் சம்பவம்



வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக குழுவின் தலைவரான அஹுங்கல்ல பாபாவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

காலி, அஹுங்கல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 2 மாடி வீடு நேற்று நள்ளிரவு ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது. எனினும் தீ விபத்தினால் வீடு பாரியளவில் சேதமடையவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அ{ஹங்கல்ல பாபா மீது பல கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்து அந்த குழுக்களில் ஒன்றின் வேலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அ{ஹங்கல்ல பாபாவுக்கு பல எதிரிகள் உள்ளமையினால் இவ்வாறு சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அ{ஹங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.