'விடைபெறுகிறேன் இந்தியா.." : கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு




விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த காணொளி தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.


சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளியில் அவர் இந்தியாவிவில் இருந்து விடைபெறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம், விமானத்தில் ஏறப் போகிறோம். விடைபெறுகிறேன் இந்தியா, 10 மணி நேர பயணத்தில் லண்டனுக்குத் திரும்ப இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தன் அருகில் அமர்ந்திருந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த அவர்,


உங்கள் துணையுடன் பொறுமையை இழக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய முடிவு, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியுடன் அமைதியாக லண்டன் திரும்புகிறேன் என அவர் பதிவு செய்துள்ளார்.



 விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 53 பிரித்தானிய மக்களில் ஜேமி ரே மீக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.