சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்தநாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்குஒரு தளமாக அறுகம்பையை பாவிக்கப்போகின்றார்கள். பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தளங்கள், ஹோட்டல்கள் நிலங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்படுகின்றன. எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாசாரத்தை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றனவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அவரின் கல்முனைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
நான் மிக நீண்ட காலமாக பொத்துவில் அருகம்பை பகுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி ஆதாரத்துடன் சில விடயங்களை ஆய்வு செய்த பின்பு தான் நான் இப்பொழுது இந்த கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன்.
அறுகம்பையை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலியர்கள் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தினை நிறைவேற்றுகின்ற உளவு பிரிவான மொசாட்டினை சேர்ந்தவர்கள்.
அதேபோன்று இராணுவத்தில் பணியாற்றுகின்ற வீர, வீராங்கனைகள் இன்று உல்லாசப் பயணிகள் போன்று பொத்துவில் பகுதியில் முகாமிட்டு முஸ்லிம் சமுதாயத்தை ஆத்திரமூட்டச் செய்கின்ற வகையில் பொத்துவில் பகுதியில் உள்ள மபாஷா பள்ளிவாசல் அருகில் அவர்களுடைய சபாத் என்ற யூத ஆலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த ஆலயம் ஒரு சட்ட விரோத ஆலயம் .இது சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் பல தரப்பினரிடம் முறையிட்டும் இன்னும் உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவில்லை.
அதற்கு அனுமதி வழங்கி இருக்கின்ற பிரதேச சபையும் மௌனமாக இருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.
அவர்களுக்கு உரித்தான சட்டத்தை அமுல்படுத்தி அந்த சபாத் இல்லத்தை மூடுவதற்குரிய எந்த ஒரு பகிரங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதை விட ஊடகவியலாளர்கள் இந்த விடயம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற போது பிரதேச சபை நிர்வாகம் அதன் தவிசாளர் மழுப்பலான பதிலை தான் தெரிவித்திருக்கின்றார்.
இதன் காரணமாக அவர்கள் இரண்டாவது சபாத் இல்லத்தை ரூபாஸ் ஹோட்டல் அருகே ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதிய இரண்டாவது சபாத் இல்லத்தில் அவர்களது மத நிகழ்ச்சிகள்நடந்துள்ளன.
இது சம்பந்தமாக பொத்துவில் இளைஞர்கள் தங்களது முகநூலில் கண்டனத்தை தெரிவித்த போது பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினராலும் அந்த இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
பொத்துவில் பகுதியில் உள்ளமுக்கிய தளங்கள் இஸ்ரேலியர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் ,நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாசாரத்தை பின்பற்றுவதற்கான ஆசைவார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன .
இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள்என்பது தான் இதில் உள்ள மர்மம்.இந்த நாட்டில் ஹிக்கடுவை, பாசிக்குடா, பெந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு மற்றும் கண்டி,நிலாவெளி என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக ஒரு குடியிருப்பாளர்கள் போன்று நிலங்களை வாங்கி செயற்படுகிறார்கள் என்றால் பூகோள அரசியலில்பெரும் ஒரு சதியாகவே பார்க்கவேண்டும் என்றார்