புத்தளம் வென்னப்புவவில் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று (2) விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதன்போது, 900 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 4 மகசின்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வாகனத்தை சோதனை செய்த போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
இந்த போதைப்பொருட்கள் சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர்.
நீண்ட காலமாக பொதிகளை உரிமை கோராததால், அவைகளை விரிவான சோதனைகளுக்கு உட்படுத்த சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 25 ஆம் திகதி சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொதிகளை திறந்து ஆய்வு செய்தனர், மேலும் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்தப் பொதிகளில் 1 கிலோ 101 கிராம் கொக்கேய்ன், 1 கிலோ 666 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் நான்கு குப்பிகளில் கஞ்சா எண்ணெய் இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபாவாகும், மேலும் போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் நேற்று (2) விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதன்போது, 900 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 4 மகசின்கள், 40 தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றுடன் சந்தேகநபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த நம்பகமான இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதி வழியாக பயணித்த சந்தேகத்திற்கிடமான ஒரு கெப் வாகனத்தை சோதனை செய்த போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 முதல் 51 வயதுக்குட்பட்ட உலுக்குளம், போத்தானேகம மற்றும் அனுராதபுரம், இஹலகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கைத்துப்பாக்கிகள், மகசின்கள் மற்றும் தோட்டாக்கள், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
இந்த போதைப்பொருட்கள் சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர்.
நீண்ட காலமாக பொதிகளை உரிமை கோராததால், அவைகளை விரிவான சோதனைகளுக்கு உட்படுத்த சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 25 ஆம் திகதி சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பொதிகளை திறந்து ஆய்வு செய்தனர், மேலும் பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதைப்பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
அந்தப் பொதிகளில் 1 கிலோ 101 கிராம் கொக்கேய்ன், 1 கிலோ 666 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் நான்கு குப்பிகளில் கஞ்சா எண்ணெய் இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 60 மில்லியன் ரூபாவாகும், மேலும் போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.