ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடங்களுக்கு இதுதொடர்பில் நேற்று கருத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
“அடுத்த வாரம் ஈரானுடன் பேச உள்ளோம்.
நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் எனக்குத் தெரியவில்லை, ஈரான் மற்றும் இஸ்ரேல் சோர்வாக இருக்கிறார்கள்.
அவர்கள் மிகவும் மோசமாக சண்டையிட்டனர், பின் இருவரும் சண்டையை நிறுத்த முடிவு செய்தனர்.
ஒரு நாள் போர் தொடங்கலாம் என நினைக்கிறேன், அது விரைவில் தொடங்கலாம்.
ஒப்பந்தம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி எனக்கு கவலையில்லை.
அணு ஆயுதம் வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம் மற்றும் அணு ஆயுதத்தை நாங்கள் அழித்தோம்" என தெரிவித்துள்ளார்.