நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
#Kurunthoormalai ‘kurundi vihara’ Buddhist monk Galgamuwa santhabodhi entered the area where the Tamil people were peacefully engaged in Pongal worship as per the Archeology Department's strict rules and tried to disrupt the Pongal worship of the Tamils. pic.twitter.com/hOmaUjFoAk
— kumanan (@kumanan93) August 18, 2023
பௌத்த பிக்கு ஒருவர் நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் இன்று (18.08.2023) பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தென்பகுதியிலிருந்து பேருந்துகளில் வந்த நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதோடு பாதுகாப்பு பலப்படுத்தபப்பட்டிருந்தது.
இதநேரம் குருந்தூர் மலைக்கு செல்லும் நபர்கள் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.