''கணேமுல்ல சஞ்சீவ என்னுடை தம்பி..'' : நீதிமன்றில் வாக்குமூலமளித்த தில்ருக்ஷி


கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும்வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான இரண்டு நாள்நீதவான் விசாரணையின் முடிவில் பிரதானநீதவான் இந்த உத்தரவை வெள‘யிட்டார்.

இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவவின்மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைஅறிக்கையையும் கொழும்பு குற்றப்பிரிவு,
நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

தீர்ப்பை அறிவித்த பிரதான நீதவான், விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கொழும்பு தடயவியல்வைத்திய அதிகாரி அலுவலகம் சமர்ப்பித்தபிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, உயிரிழந்தசஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்லசஞ்சீவவின் சகோதரி தில்ருக்ஷி சமரரத்ன சõட்சியமளித்தார்.கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளின்வழிகாட்டுதலின் கீழ் சாட்சியமளித்த சகோதரி, "சஞ்சீவ என்னுடைய தம்பி. இந்தச்சம்பவத்திற்கு முன்பு, அவர் பூஸா சிறையில் இருந்தார். நான் வாரத்திற்கு இரண்டு
முறை என் தம்பியைப் பார்க்கச் சிறைக்குச்செல்வேன். அவருக்கு என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது குறித்து எனக்குத்தெரியாது.'

கடந்த 19 ஆம் திகதி வழக்கு ஒன்றிற்காகஅவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குஅழைத்து வரப்பட்டதை நான் அறிந்திருக்கவில்லை. அன்று காலை, சுமார் 10:30 அல்லது11:00 மணிக்கு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என் சகோதரன் சுடப்பட்டதாக அவர்கள்
சொன்னார்கள். அதே நேரத்தில், நான் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேராவை அழைத்தேன்.அவர் சுடப்பட்டதாகக் கேள்விப்பட்டதாகக்கூறினார். பின்னர் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தடயவியல் வைத்திய பரிசோதகர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில்நான் கலந்து கொண்டேன். இதன்போதுஉயிரிழந்தவர் சஞ்சீவ குமார சமரத்ன எனநான் அடையாளம் கண்டேன். பின்னர்
வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுத்தேன்."



 பின்னர், நானும் என் அம்மாவும் உடலைஏற்றுக்கொண்டோம்,' என்று அவர் சாட்சியமளித்தார். இதன்போது, பாதிக்கப்பட்டதரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, உயிரிழந்த சஞ்சீவ குமார சமரரத்ன
மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்துமுழுமையான விசாரணை அவசியம் என்றுசுட்டிக்காட்டினர்.

மேலும், அவரது பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள்மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படைஅதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்துவிசாரணை நடத்துவது அவசியம் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், மரணத்திற்கான
காரணத்தைக் கூறி தீர்ப்பை அறிவித்தார்.

பின்னர் பதிவு செய்வதற்கு இறப்புச் சான்றிதழை வழங்க உத்தரவிட்டார்.மேலும், இந்த வழக்கை மார்ச் 7 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது