''பயங்கரவாத தடைச்சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்" அதிருப்தியை வெளியிட்ட வோல்கர் டர்க்

 

இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்  வலியுறுத்தியுள்ளார்.

தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில்  நேற்று (26) மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர்,
நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும்  

அத்துடன், தன்பாலின உறவுகளை குற்றம் அற்றதாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் உள்ளதென்பது அறிய கிடைத்துள்ளதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகின்றேன்
 

நாட்டில் பொலிஸ் துறையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  

'உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் அடையப்பட வேண்டும். அத்தகைய முன்னேற்றத்தின் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்'  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி,வீடு, மற்றும் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதேநேரம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்

மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.