''கொள்கலன்களை விடுவித்த அதிகாரிகள் தப்பிச் செல்ல முயற்சி.." : அம்பலமான தகவல்


கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு வெளிநாட்டுபயணத்தடையை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக  பிவித்துறுஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாது விடுவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த உதய கம்மன்பில, அங்கு மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவற்றை கூறினார்.


 துறைமுக அமைச்சருக்கோ, சுங்கத்திற்கு பொறுப்பான நிதி அமைச்சருக்கோ
சிவப்பு லேபலுடான கொள்கலன்களை விடுவிப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்கவும் சுங்க கட்டணம் அதிகரிக்க மற்றும் குறைக்க மட்டுமே அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.

எவ்வாறாயினும் ஜனவரி 17 மற்றும் 18ஆம் திகதிகளில் பெருமளவில் சிகப்பு மற்றும் மஞ்சல் நிறலேபல்களுடனான கொள்கலன்கள்பல விடுவிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள விடுவிக்கும் சட்டத்திற்கமைய பச்சை நிற கொள்கலன்களை பரிசோதனைகளின்றி விடுவிக்க முடியும். நீல நிற கொள்கலன்களை பரிசோதனைகள் இன்றி விடுவிக்க முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் மஞ்சள் நிற கொள்கலன்கள் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், தேவைப்பட்டால் பொருட்கள் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் சிகப்பு நிற லேபல்கள் கொண்ட கொள்கலன்கள் கட்டாயம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் சிகப்புநிற லேபல்கள் கொண்ட கொள்கலன்களை ஏன் சோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டன.

இங்கே சுங்க சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஆயுதங்கள் இருந்திருக்கலாம் என்று கூறுபவர்கள் நாங்கள் அல்ல. சுங்க அதிகாரிகளே கூறுகின்றனர். இதேவேளை சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான பட்டியல் என்னிடம் உள்ளது.
அது எங்கிருந்து வந்தது. யாருக்கு அனுப்பப்பட்டது. அதற்குள் என்ன இருந்தது. அந்த கொள்கலன்களின் இலக்கங்கள் தொடர்பாக என்னிடம் இருந்த தகவல்களை நான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்.
இவ்வாறாக விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கைகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. மேலதிகசுங்க செயலாளர் 270 கொள்கலன்கள் என்கிறார். சுங்க அதிகாரிகள் சங்கத்தினரோ 323 கொள்கலன்கள் என்கின்றனர். ஆனால் என்னிடம் உள்ள பட்டியலில் 371 கொள்கலன்கள் உள்ளன.

அவற்றை நான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன். இந்த கொள்கலன்கள் தொடர்பான பட்டியலை எனது இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.
தகவல்கள் அறியும் சட்டத்திற்கமைய இந்த கொள்கலன்களுடன் தொடர்புடையவர்கள் இதற்கு முன்னரும் சுங்க தவறுகளை செய்தவர்களா? என்று கேட்டேன். ஆனால் தங்களிடம் அந்த தகவல்கள் இல்லையென சுங்க திணைக்களம் கூறுகின்றது. அப்படியென்றால் அந்த தகவல்கள் காணாமல் போயுள்ளதா? அதற்கான காரணம் என்ன? இந்த கொள்கலன்களை விடுவித்த குழுவின் தலைவராகஇருந்தவரே மேலதிக சுங்கபணிப்பாளரே சீவலி அருக்கொட ஆவார்.
இவர் நவம்பர்மாதத்தில் ஓய்வு பெறவுள்ளதுடன், பின்னர் பெல்ஜியத்திற்கு தொழிலுக்காக செல்லவும் உள்ளார். இவர் வெளிநாட்டுக்கு சென்றால் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் வெளிநாடு சென்றதால் அந்த விசாரணைகள் தடைப்பட்டதை போன்று ஆகிவிடும் என்பதனால் சீவலி அருக்கொடவுக்கு வெளிநாட்டு பயணத் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளேன்.

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்திருக்கலாம் என்று
சுங்க அதிகாரிகளினாலேயே இவற்றில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில்கடந்த ஜனவரி 17 மற்றும் 18ஆம்திகதிகளிலேயே இந்த கொள்க
லன்கள் வெளியில் வந்துள்ளன.அதன்பின்னரான காலத்தில்கடந்த வருடங்களை விடவும் அதிகளவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்தில் மொத்தமாக 105 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளதுடன், இந்தவருடத்தில் மே மாதம் வரையில்50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளன. அப்படியாயின்
சுங்க அதிகாரிகளின் சந்தேகங்களில் நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். இதனைவிடுத்து என்னை அச்சுறுத்தி சிறைக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர என்றார்.

இதேநேரம் கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தின் எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் சிவப்பு முத்திரை பதிக்கப் பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்ஙட்டமை தொடர்பாக கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை அரசியல்வாதிகளை விடுத்து முதலில் சுங்கத் தொழிற்சங்க ஒன்றியமே முன்வைத்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


சுங்கப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் உட்பட சுங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தரப்பினர் இந்தக் குற்றச்சõட்டை முன்வைத்தனர். முறையான பரிசோதனை நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாது அதிக ஆபத்துள்ள கொள்கலன்கள் சில நாட்களுக்குள் அவசரமாக விடுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கலன்களை விடுவிப் பதால் நாட்டிற்குக் சேர வேண்டிய வருவாய் இழப்பு, தடைசெய்யப்பட்ட பொருட்களைவிடுவித்தமை என பிரச்சினையொன்று தானாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.