வவுனியாவில் இளைஞன் மாயம்! காவல்துறையில் முறைப்பாடு

வவுனியா குருமன்காட்டைச் சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குருமன்காடு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றையதினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

எனினும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 077 169 1244 / 0779302469 எனும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.