கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பிரான்ஸில் பரிதாப மரணம்

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் சமுக சேவையாளருமான ஒருவரின் பரிதாப மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) என்ற இளம் குடும்பஸ்தரே இரத்தப் புற்றுநோய் காரணமாக பிரான்ஸ் நாட்டில் இன்று (09) உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள்

கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த நிலையில்,இந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் திருமணம் செய்து இரண்டு வருடங்களே ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.