நேற்று மட்டும் 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 229 பில்லியன்களை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.