மனித உயிரை கொள்ளும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த நிலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 4 எலிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு, செயலிழக்க செய்யப்பட்ட வைரசை உட்செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வைரசை உட்செலுத்திடாமல் மற்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது.

வைரசை உட்செலுத்திய எலிகள்7 முதல் 8 நாட்களில் உயிரிழந்துள்ளது. முதல் 5 நாட்களில் எலிகளின் எடை குறைய தொடங்கியுள்ளது. பின்னர் படிப்படியாக எலிகளின் இயக்கம் மந்தமடைந்ததுள்ளதோடு அவற்றின் கண்களும் வெளிறி காணப்பட்டுள்ளன.

எலிகளில் முதல் 3 நாட்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரசானது, எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் கூறும்போது, ஜனவரியில் ஜே.என்.-1 வகை கொரோனா வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கையானது உலக நாடுகள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.