CIDயின் 5ஆவது மாடியில் இருந்து பாய்ந்து பெண் தற்கொலை!


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட 46 வயதான பெண்ணொருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலைக்கான உரிய காரணம் இன்னும் வெளியாகவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.