சாமி சிலையை தொட்டு வணங்கிய காட்டு யானை video

கோவை தெற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

 குடிநீர் தேடியும் உணவு தேடியும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய பகுதிகளில் யானைகள் உலாவி வருகின்றன.

 அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மலையடிவாரத்தை அண்மித்துள்ள தனியார் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அங்கு இருந்த ஆஞ்சிநேயர் சிலையை தும்பிக்கையால் தொட்டு பார்த்துவிட்டு சென்றது.

 இவ்வாறு யானை ஒன்று சாமி சிலையை தொட்டு வணங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.