அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளாதது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.

பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்(22) தினம் ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் நடைபெற்ற இந்த திறப்பு விழாவிற்காக கிரிக்கெட் பிரபலங்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்த நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், தோனி ஏன் கோயில் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழும்பியுள்ளது.

சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தோனி விருப்பம் காட்டுவது இல்லை என்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், பொது இடங்களுக்கு வந்து தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பாததால் இதனை புறக்கணித்திருப்பார் என்றும் கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.