விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏன் இணைந்தேன்..! பிள்ளையான் விளக்கம்

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் போது எனக்கு பதினாறறை வயது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நான் பாடசாலை சென்று படிக்கும் காலப்பகுதியில் எனது கிராமம் முழுவதும், போர்சூழலை அண்டியே காணப்பட்டது. அதிலும் 90ஆம் ஆண்டு நான் பாடசாலையில் இருக்கும்போது தான் அப்பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டன.

காவல் நிலையங்களை விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எங்களது பாடசாலை அருகில் எல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்டன. பாடசாலையை விட்டு வீட்டுக்கு நாங்கள் ஓடிச் சென்றோம். அதன் பின்னர் தான் நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறியது.

எங்களது வகுப்பில் இருந்தும், எனது பாடசாலையில் இருந்தும் பலர் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர். அந்த சமயம் எங்களது கிராமத்தை அண்டிய பல பகுதிகளில் ஊர்காவற் படை என்ற ஒன்று இருந்தது.