இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு, படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகரங்களை கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பிலான உத்தரவையே விசேட வர்த்தமானி மூலம் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.