இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 31(3) சரத்தின் பிரகாரம் அதிபர்த் தேர்தல் 2024 செப்டெம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த காலப்பகுதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில, அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

கோட்டாபய ராஜபக்ஸ 2019 நவம்பர் 18 ஆம் திகதி பதவியேற்றதாகவும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதியுடன் ஐந்து வருடங்களின் பதவிக்காலம் முடிவடையும் என்றும் குறிப்பிட்ட அவர் செப்டம்பர் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.