மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி நீராடச் சென்ற சிறுவர்களுக்கு நடந்த அவலம்!


மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையி சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நான்கு பேர் நீராட சென்றதாகவும் அதில் இருவர் இருவரே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்வதாக கூறி சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.