கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த சகோதரர்களுக்கு நிகழ்ந்த அவலம்



கனடாவில் இருந்து இலங்கை வந்த இரண்டு இலங்கை சகோதர்கள் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்வையிடுவதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதன்போது கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உயிரிழந்த இன்னொருவொருவரின் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.