உண்மையை பேச ஒருபோதும் தயங்கமாட்டோம் – மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமடைந்துவருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் எமது வாய்களுக்கு பூட்டுபோட்டு, சாவியை மொட்டு கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

உண்மையை வெளிப்படையாக கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.” – என்றார்.