பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை- இரா.சம்பந்தன்!

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் உறுதியாகவுள்ளோம்.அதன்பிரகாரம் ஆக்கபூர்வமான பேச்சை ஜனாதிபதி முன்னெடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பை நாம் வழங்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.