எனது கதையை முடிக்க பார்த்தனர் : மைத்திரி காட்டம்

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

என்னை இல்லாமல் ஆக்கும் நோக்கிலேயே 2010 இல் எனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

ஆனால் எனக்கு அந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டதால்தான் ஜனாதிபதி ஆக முடிந்தது என்பதை தற்போதைய சுகாதார அமைச்சருக்கு நினைவுபடுத்துகின்றேன்.

என்னை கொலை செய்ய பார்த்தனர். ஆனால் நான் விழித்துக்கொண்டேன். எனது ஆட்சிகாலத்தில் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் நீதவான் முன்னிலையில் எரிக்கப்பட்டது.