நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் யாழ். செம்மணிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் அங்கு கூடியுள்ள நிலையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.