பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன?

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புக்காகவும், கல்வி மற்றும்  பிற வசதிகளுக்காகவும் மக்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு நகரங்களுக்கு செல்வது இயல்பான விடயம் தான்.

ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்தை விட்டு சென்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

ஆம் அந்த கிராமத்தின் பெயர் குல்தரா.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் உள்ளது குல்தரா கிராமம். எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் மட்டுமே வாழும் ஒரு சபிக்கப்பட்ட கிராமம்.

இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

வாழ்ந்து வந்த இந்தக் குல்தாரா கிராமத்தில், தற்போது பேய்களும் இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் மட்டும் பேய் உலவும் பூமியாக இருக்கிறது? இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஆனால் யாரும் இதுவரை சரியான காரணத்தை கூறவில்லை என்பதே உண்மை. ஒரே நாளில் இங்கு வசித்த மனிதர்கள் எங்கே போனார்கள்? குல்தாரா கிராமத்தில் வசித்த மக்கள் அனைவருக்கும் மந்திரவாதி ஒருவர் சாபம் கொடுத்துவிட்டார் என ஒரு சாராரும் உள்ளூர் பண்ணையாரால் கிராம மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர் என ஒரு சாராரும் தெரிவிக்கின்றனர்.

அன்றிலிருந்து பேய்களின்  கிராமமாக குல்தாரா மாறிவிட்டதாகவும், கிராமத்தில் உள்ள மக்களே இங்கு பேய்களாக உலாவுவதாகவும் பலர் கூறுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. 

300 வருடங்களுக்கு முன்பு வரை ஜெய்சால்மர் அரசாங்கத்தின் கீழ் வளமான கிராமமாக இருந்த இந்த கிராமம் இன்று யாரும் இல்லாமல் அனாதையாக கைவிடப்பட்டு இருக்கின்றது.

1291-ம் ஆண்டு பாலிவால் பிராமணர்களால் குல்தாரா கிராமம் நிறுவப்பட்டது. 1825-ம் ஆண்டு ஒரு நாள் இரவு திடீரென்று கிராமத்தில் உள்ள அனைவருமே இருளில் மாயமாக மறைந்து போனதாக தெரிவிக்கப்படுகினறது.

கொடுமைக்கார பிரதம மந்திரியாக இருந்தவன், குல்தாரா கிராமத்தின் தலைவர் மகளை விரும்பியதாகவும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள், தங்கள் கிராமத்தை கைவிட்டு இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போனார்கள்.

அவர்கள் போவதற்கு முன்பு, இந்தக் கிராமத்தில் இனிமேல் யாரும் வசிக்க கூடாது என சாபமிட்டுச் சென்றுள்ளார்கள். தாரா என்றாலே பேய் கிராமம் என்ற பெயர் நிலைப்பெற்றுவிட்டது. தற்போது சமூக வளைத்தளங்களின் பெருக்கத்தால் உலகம் முழுதும் இந்த கிராமம் பற்றிய தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

இதனால் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் அரசாங்கம் இப்பகுதியை மேம்படுத்த முடிவு செய்தது.

ஆனால் இங்கு வருகை தரும் யாருக்குமே மாலை ஆறு மணிக்கு மேல் கிராமத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது.  இன்றும் இந்தக் கிராமத்தில் இரவில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது.