தேசபந்துவுக்கு வழங்கப்பட்ட பெறுமதியான காணி : பின்னணியில் பிரபல தொழிலதிபர்



பதவி நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு புளத்சிங்கள பகுதியில் ஒரு பிரபல தொழிலதிபர் பெறுமதியான காணி ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, காணி பரிவர்த்தனை நடந்த விதம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கும் தேசபந்து தென்னகோனுக்கும் இடையிலான உறவு குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.


குறித்த தொழிலதிபர் ஒரு பிரபலமான பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளர் என தெரியவந்துள்ளது.