தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது


தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கொடியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கேர்ணர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம்(29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகை தந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.