கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

குறித்த தகவலை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக சாருக தமுனுகல (ஊhயசரபய னுயஅரரெபயடய) குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி செய்திகள் வரக்கூடும். இதன் மூலம் நீங்கள் பரிசுத் தொகையை வென்றதாகக் கூறலாம்.

பல்வேறு சலுகைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை நீங்கள் பெறலாம்.

இதுபோன்ற செய்திகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரலாம். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 7 ஆம் திகதி இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று  கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி அதன் மூலம்  இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்று முன்தினம் 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.